டெசோ மாநாடு நிச்சயம் வெற்றி பெறுமாம்... திருமாவளவன் சொல்கிறார்!

நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை. இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவுவதால் அங்கு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரித்து விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் வேலை செய்வோரின் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. எனவே, வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழக அமைச்சரவையில் தனி அமைச்சரவையை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களை காப்பாற்றவும், அங்கு தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சார சீரழிவை தடுக்கவும் வலியுறுத்தி டெசோ மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்களும், சான்றோர்களும், புலம்பெயர்ந்து வாழும் சான்றோர்களும் பங்கேற்கிறார்கள். அவர்களது பாதுகாப்புக் கருதி தனித்தமிழ் ஈழ கோரிக்கை இம்மாநாட்டில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தனித் தமிழ் ஈழம் வேண்டாம் என்று கூறவில்லை. டெசோ மாநாடு நிச்சயம் வெற்றி பெறும் என்றார் திருமாவளவன்.
யாருக்கு வெற்றி?!












Click it and Unblock the Notifications