Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரணாபுக்கு எதிராக சங்மா வழக்கு தொடர்வதற்கும், எங்களும் சம்பந்தமில்லை: நழுவிய பாஜக

Subscribe to Oneindia Tamil

Sangma
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக சங்மா உச்ச நீதிமன்றத்தை அணுகினால் அதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் அவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அளித்த கடிதத்தில் உள்ள கையெழு்தது போலியானது என்று கூறி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சங்மா தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவிருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில்,

பிரணாப் முகர்ஜிக்கு எதிராக சங்மா உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் அது அவருடைய தனிப்பட்ட முயற்சி. அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆனதை மனதார வரவேற்கிறோம் என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சங்மாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுக, ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+