சென்னையில் ஆறுகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ரூ300 கோடியில் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரில் உள்ள கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களை ரூ300 கோடியில் நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மற்றும் நகரைச் சுற்றி தொழிற்சாலைகள் மற்றும் வணிக அமைப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் தொகை அதிகரித்து, தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருவதற்கேற்ப கழிவுநீர் அகற்றல் அமைப்பு அமைக்கப்பட வேண்டும்; நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதற்காக சென்னை நகரில் உள்ள நீர் வழிப்பாதைகளில் கழிவு நீர் கலக்கக் கூடிய கூவம் ஆற்றில் 105 இடங்கள், பக்கிங்காம் கால்வாயில் 183 இடங்கள், அடையாறு ஆற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய 300 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக முதற்கட்டமாக 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+