ஸ்ருதிக்கு அஞ்சலி... தாம்பரத்திலிருந்து முடிச்சூர் வரை ஆயிரக்கணக்கானோர் பேரணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி ஸ்ருதியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை தாம்பரத்திலிருந்து சிறுமியின் வீடு உள்ள முடிச்சூர் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது.

ஸ்ருதியின் மறைவால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை அதை நேரில் பார்த்த முடிச்சூர் மக்கள். இந்த நிலையில் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விபத்து நடந்த தாம்பரம்-முடிச்சூர் சாலையிலிருந்து சிறுமியின் வீடு அமைந்துள்ள வரதராஜபுரம் வரை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி இன்று காலை நடந்தது.

இந்தப் பேரணிக்கு முடிச்சூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தலைமை தாங்கினார். இப்பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், வக்கீல்கள், ஆட்டோ டிரைவர்கள் என சகலதரப்பினரும் கலந்து கொண்டனர்.

அனைவரும் சிறுமியின் வீடு வரை வந்து சிறுமியின் உடலுக்கு தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+