ஹரியானாவில் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து: 29 பேர் பலி

ஹரியானா மாநிலம் கைத்தால் மாவட்டம் சிசார்ஹட்டோ கிரமாத்தைச் சேர்ந்த 60 பேர் ஒரு டிரக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குகா மாரி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் டிரக் இன்று காலை 8.30 மணி அளவில் ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி அருகே சென்று கொண்டிருக்கையில் அவ்வழியாக வந்த இன்னொரு டிரக்கும் இதுவும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்து நடந்தபோது யாத்ரீகர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 22 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். காயமடைந்தவர்கள் ஹிசாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications