நித்தியானந்தா போட்ட வழக்கு.. சைதை கோர்ட்டில் ஆர்த்தி ராவ் சரண்டராகி ஜாமீன் பெற்றார்!

அமெரிக்காவில் வசித்து வந்தவர் ஆர்த்தி ராவ். நன்கு படித்தவரான இவர் நித்தியானந்தாவின் பால் ஈர்க்கப்பட்டு அவரது சிஷ்யையாக சேர்ந்தார். ஆனால் சேர்ந்த சில காலத்திற்குள்ளாகவே ஆர்த்தி ராவிடம் நித்தியானந்தா பாலியல் ரீதியாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நித்தியானந்தாவிடமிருந்து விலகினார் ஆர்த்தி ராவ்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூர் வந்த அவர் அங்கு தனியார் தொலைக்காட்சியில் நித்தியானந்தாவின் லீலைகள் என்று பல பாலியல் மோசடிச் சம்பவங்களை விளக்கிக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நித்தியானந்தா தன்னை எப்படியெல்லாம் சீரழித்தார், அசிங்கமாக நடந்து கொண்டார் என்பதை பேட்டிகள் மூலம் கூறினார்.
உண்மையில், இந்த ஆர்த்தி ராவ்தான், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்தவர் ஆவார். அதை எப்படி தான் பதிவு செய்தேன் என்பதையும் விளக்கமாக கூறியிருந்தார் ஆர்த்தி ராவ். மேலும், இந்த வீடியோவை தான்தான் லெனின் கருப்பனிடம் கொடுத்து வெளியிடச் செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து லெனின் கருப்பனும், ஆர்த்தி ராவும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஆர்த்தி ராவ் மீது சிபிசிஐடி போலீஸில் புகார் செய்தார் நித்தியானந்தா. இதையடுத்து லெனின் கருப்பன் கைது செய்யப்பட்டார். ஆர்த்தி ராவ் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்து அதையும் பெற்றார்.
இதையடுத்து சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முருகன் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார்.












Click it and Unblock the Notifications