For Quick Alerts
For Daily Alerts
Just In
அமெரிக்க பேருந்து விபத்தில் இந்திய இளம்பெண் பலி- 38 பேர் படுகாயம்
நியூயார்க்: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து ஒன்றில் இந்திய இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 38 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொலம்பியா நோக்கி 64 பயணிகளுடன் டபுள்டக்கர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிகாகோவுக்கும் கான்சாஸ் நகரத்துக்கும் இடையே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அதிதி அவத் என்ற 24 வயது இளம்பெண் உயிரிழந்தார். உயிரிழந்த அதிதி அவத், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பயின்று வந்தார்.
இந்த விபத்தில் 38 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
An Indian girl was killed and 38 people injured when a double decker bus apparently blew a tire, skidded and slammed into a pillar in the US state of Illinois. Illinois state police have identified the victim as Aditi Avhad, 24. Police said she was a native of India and was travelling to Columbia.
Story first published: Friday, August 3, 2012, 15:52 [IST]