நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம்... அத்வானியின் கலகம்....?

Subscribe to Oneindia Tamil

L K Advani
டெல்லி: 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாமல் 3வது அணிசார்பில் ஒருவர்தான் பிரதமராக வருவார் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியிருக்கும் கருத்து பாஜகவுக்குள்ளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எல்.கே.அத்வானி இணையதள வலைப்பூவில் (ப்ளாக்), 2014-ம் ஆண்டு தேர்தலைப் பற்றி கூறியிருக்கும் ஆரூடங்கள்தான் இப்போது நாடு முழுவதும் அரசியலில் ஹைலைட்டாக இருந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறியிருப்பதால் காங்கிரஸ் கடும் எரிச்சல் அடைந்திருக்கிறது.

அதே போல பாஜக ஆட்சிக்கு வராது என்பது போல அத்வானி கருத்துத் தெரிவித்திருப்பதை,
ஓட்டப் பந்தயம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார் அத்வானி என்று சாடியிருக்கிறது காங்கிரஸ்.

ஆனால் அத்வானியின் கருத்து காங்கிரசை விட பாரதிய ஜனதாவுக்குள் தான் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

அதாவது பாஜக அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் 3வது அணியைச் சேர்ந்த ஒருவர் தான் (பிகார் முதல்வர் நிதிஷ்குமார்?) பிரதமராக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் அத்வானி.

இதனால் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வருணிக்கப்படும் நரேந்திர மோடி முகாமின் முகம் இப்போது சிவந்து கிடக்கிறது. பாஜக அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் 3-வது அணியின் சார்பில்தான் ஒருவர் பிரதமராவார் என்று அத்வானி கூறியிருப்பது மோடியை மனதில் வைத்துத்தான் என்று அந்த முகாம் குமுறுகிறது.

இதன்மூலம் பாஜகவைச் சேர்ந்த யாரும், குறிப்பாக மோடி, பிரதமராக முடியாது என்று தான் அத்வானி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரசை விமர்சிக்கலாம்.. 3-வது அணியை விமர்சிக்கலாம்.. இந்த அணிதான் பிரதமர் என்று ஜோசியம் கூறினால் மக்கள் எப்படி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்? காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் போது நரேந்திர மோடியை பிரதமராக முன்னிறுத்தி தேர்தல் களத்துக்குப் போவதற்கு முன்பே இவங்களுக்கு வாக்குப் போட்டு பிரயோஜனம் இல்லை என்கிற மாதிரி மூத்த தலைவரான அத்வானியே கூறியிருப்பது என்பது இம்மெச்சூர்ட்டியான ஒரு செயல்தான் என்கிறது மோடியின் முகாம்.

அத்வானி கருத்து பற்றி பா.ஜ.க. மூத் தலைவர்களில் ஒருவர் கூறுகையில், அத்வானியைப் பொருத்த வரை அரசியலில் அவரது இன்னிங்ஸ் முடிந்து விட்டது. எனவே 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவு ஏற்பட்டாலும் அது அவரை பாதிக்கப் போவதில்லை. இதனால்தான் அவர் கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். இது கட்சி மீதான மதிப்பை குறைப்பதாக உள்ளது. அத்வானி இப்படி தன் கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்றார்.

நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம்... அத்வானியின் ஆரூடம்....?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+