'கல்வி உதவித்தொகை மோசடி: அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்?'
சென்னை: ஆதிதிராவிட நலத்துறை நிதி மோசடி விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களை கைது செய்ய உத்தரவிட்ட நாமக்கல் மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆதிதிராவிட நலத்துறை நிதி மோசடியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் முறைகேட்டுக்கு மூலக் காரணமாக இருந்த ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றும் மாவட்ட நல அலுவலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர் ஆகியோரை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன்?
மாணவர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பங்கள் பலவற்றில் தலைமை ஆசிரியர்களின் கையெழுத்து இல்லை. சுகாதார ஆய்வாளர்களின் சான்றுகள் இல்லை. இருப்பினும் அவசர அவசரமாக ஆதிதிராவிட நலத்துறையின் எழுத்தர், கண்காணிப்பாளரின் சாதகமான குறிப்புகளுடன் உரிய அதிகாரி ஒப்புதல் கையெழுத்திட்டுள்ளார்.
பின்பு அவசரமாக அந்த காசோலைகள் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி, புரோக்கர்கள் மூலம் வங்கிகளில் மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்தது அதிகாரிகள் தான்.
தலைமை ஆசிரியர்களை கைது செய்ய உத்தரவிட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அலுவலக பணியாளர்களையும் கைது செய்ய ஏன் உத்தரவிடவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications