டெசோ மாநாட்டில் 'ஈழம்' வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!
Subscribe to Oneindia Tamil

சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நாளை நடக்கவிருக்கும் டெசோ மாநாட்டில், ஈழம் என்ற வார்த்தையைத் தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தார். முக்கிய நிர்வாகிகளும் பேசினர்.
இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடை இல்லை என மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,











Click it and Unblock the Notifications