பெரிய அளவிலான போராட்டம் குறித்து ராம்தேவ் இன்று அறிவிப்பு: ஊழல்வாதிகளின் பெயரை வெளியிட முடிவு

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்றக் கோரியும் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை 3 நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதப் போராட்டம் முடிவதற்குள் தங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அறிவிக்க வேண்டும் என்று அவர் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் நேற்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் இன்னும் ராம்லீலா மைதானத்தில் தங்கி போராடி வருகின்றனர்.
அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் முறையிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணத்தை வைத்திருப்பவர்களின் பெயர்களை இந்நாள் வரை நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் இனிமேல் வெளியிடுவோம். எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறி்தது இன்று அறிவிப்போம் என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
தனது அடுத்த கட்டப் போராட்டம் நாடு முழுவதும் பெரிய அளவில் நடக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications