For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூடு, 2 பேர் காயம்

By Chakra
Google Oneindia Tamil News

Muthoot Finance
பெங்களூர்: பெங்களூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க வந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த நிறுவனத்தின் மேலாளர் படுகாயமடைந்தார்.

பெங்களூர்-மைசூர் சாலையில் நித்யானந்தாவின் ஆசிரமம் அமைந்துள்ள பிடுதி அருகே மரியப்பன்பாளையாவில் இந்த சம்பவம் நடந்தது.

இன்று காலை 10.30 மணிக்கு இங்குள்ள முத்தூட் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்த மூன்று பேர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அந்தக் கிளையின் மேலாளர் சுதாகரும் பாதுகாவலரும் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு கூட்டம் கூடிவிடவே அந்த மூவரும் தப்பியோடிவிட்டனர்.

படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுட்டவர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அவர்கள் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்தார்களா அல்லது மேலாளரின் மீது இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பெங்களூர் பல்கலைக்கழகத்துக்கு மிக அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
A shoot out has been reported in the outskirts of Bangalore near Bidadi in the vicinity of the Bangalore University. The manager of Muthoot Finance, Sudhakar is understood to have been shot by three bike-borne assailants. The three fled from the scene immediately. Initial reports suggest that the men might have tried to loot the finance company and in the melee shot the manager.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X