டபுள் மீனிங்கில் பேசும் ஹெட்மாஸ்டர்... கலெக்டரிடம் ஆசிரியை புகார்!
நாமக்கல்: தான் பணியாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், டபுள் மீனிங்கில் பேசுவதாகவும், பாடம் நடத்த விடாமல் சேட்டை செய்து வருவதாகவும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆசிரியை ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமரகுருபரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண் அங்கு வேகமாக வந்தார். கலெக்டரிடம் ஆங்கிலத்தில் அவர் பேசினார். அவர் ஆவேசமாக பேசியதால் அனைவரும் அவரையே கவனித்தனர், கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் கூறுகையில், என் பெயர் சீத்தாலட்சுமி. நான் திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்.
நான் ஏற்கனவே, மோகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் போது, அந்த பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் மாணிக்கம் என்பவர், என்னிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவதும், தனியாக தன்னுடைய அறைக்கு தேவையில்லாமல் கூப்பிட்டும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து என்னை மாணவர்களுக்கு பாடம் நடத்தவிடாமல் தொல்லை செய்தார்.
அவரது விருப்பத்துக்கு உடன்படாத என்மீது பொய் புகார்களை அதிகாரிகளிடத்தில் கொடுத்து திருமலைப்பட்டிக்கு கட்டாய பணியிட மாற்றம் செய்ய வைத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையடுத்து இதுகுறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார் கலெக்டர் குமரகுருபரன்.












Click it and Unblock the Notifications