டி.என்.பி.எஸ்.சி ஆபீஸில் இருந்து வினாத்தாள் லீக் ஆனதா? அச்சகத்தில் இருந்து அவுட் ஆனதா? விசாரணை

ஈரோட்டில் சிக்கிய 4 பேர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 பதவிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியது. அப்போது ஈரோட்டில் தேர்வு எழுதிய தனக்கொடி என்பவர் மூலமாக வினாத்தாள் அவுட் ஆன விவரம் தெரியவந்தது. அவரும் அவரது கணவர் செந்திலும் தேர்வு எழுதியவர்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் கொடுத்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கொடியும் அவரது கணவர் செந்திலும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் ஈரோடு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த சுதாகரிடம் வினாத்தாளை விலை கொடுத்து வாங்கியதாக ஒப்புக் கொண்டனர்.
பின்னர் சுதாகரிடம் நடத்திய விசாரண்ணையில் ஈரோடு மாவட்டம் மைலம்பாடியைச் சேர்ந்த வரதராஜனுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களுக்கு இ மெயில் மூலம் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி, திருவண்ணாமலையில் சிக்கிய 3 பேர்
இதனிடையே தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் குரூப்-2 தேர்வு எழுத வந்த சுரேஷ்குமார் என்பவர் வெள்ளைப் பேப்பருடன் தேர்வு மையத்துக்குள் நுழைந்திருக்கிறார். அவரிடம் வெள்ளைப் பேப்பரை கண்காணிப்பாளராக வந்திருந்த அரூர் துணை வட்டாட்சியர் கருப்பசாமி வாங்கிக் கொண்டு தேர்வு எழுத அனுமதித்தார்.
யதேச்சையாக அந்த வெள்ளை பேப்பரை புரட்டிப் பார்த்த அதிகாரி கருப்பசாமிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அது குரூப் 2 தேர்வுக்கான வினா விடைகள் முழுவதும் அதில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து கம்பைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்த சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில் முத்தானூர் அருண் மற்றும் பூபேஸ் ஆகியோருடன் சேர்ந்து ரூ3 லட்சத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி ஆசிரியர் விவேகானந்தனிடம் வினாத்தாளை மற்றொரு ஆசிரியர் ரங்கராஜ் மூலம் வாங்கியதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் சுரேஷ்குமாரையும் கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள அருண், பூபேஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
எப்படி வினாத்தாள் அவுட் ஆனது?
இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் வினாத்தாள் எப்படி அவுட் ஆனது என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக பணியாளர்கள் யாரேனும் ஸ்கேன் செய்து இந்த வினாத்தாளை அவுட் ஆக்கும் முறைகேட்டில் ஈடுபட்டனரா? அல்லது வினாத்தாள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் இருந்து இந்த வினாத்தாள்கள் அவுட் ஆனதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 7 பேரின் மின்னஞ்சல் முகவரிகளும் பெறப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications