கோட்டை கொத்தளத்தில் 12-வது முறையாக தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஜெயலலிதா

இன்று காலை தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
முதல்வர் உரையைத் தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 11 அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளுடன், சிறப்பான முறையில் சமூக சேவை செய்தவர்களுக்கும் விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். சிறப்பாகப் பணியாற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விருது மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கபப்ட்டன.
விருது பெற்ற காவல்துறை அதிகாரிகள்:
1. சி.ராஜேஸ்வரி-சென்னை தெற்கு மண்டல குற்றப் பிரிவு எஸ்.பி.
2. பி.மலைச்சாமி-திருச்சி குற்றப் பிரிவு டி.எஸ்.பி.
3. ச.ஜெயச்சந்திரன்-சென்னை ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு டி.எஸ்.பி.
4. நா.பாலசுப்பிரமணியன்-சேலம் குற்றப் பிரிவு ஆய்வாளர்.
5. க.அண்ணாதுரை-திருவண்ணாமலை குற்றப் பிரிவு ஆய்வாளர்.
6. கோ.கி.கண்ணன்-விழுப்புரம் நகர காவல் நிலைய ஆய்வாளர்.
பொது சேவைக்கான விருது பெற்றோர்:
1. கி.பி.சண்முகராஜேஸ்வரன்-சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர்.
2. எம்.சுதாகர்-சென்னை குற்றப் புலனாய்வுத் துறை ஏ.எஸ்.பி.
3. சி.ராஜேந்திரன்-தஞ்சாவூர் கியூ பிரிவு டி.எஸ்.பி.
4. சி.புளோரா ஜெயந்தி-தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பி.
5. ராஜேஸ்வரி-சென்னை மாநகர குற்றப் பிரிவு ஆய்வாளர்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications