வடகிழக்கு மாநிலத்தவர் விவகாரம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு மாநிலத்தவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அசாமில் நிகழ்ந்து வரும் இன மோதலையடுத்து நாட்டின் பிற மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் ரயில் நிலையங்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் வாழும் வடகிழக்கு மாநிலத்தவர் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். இந்நிலையில் சென்னை கோட்டையில் தலைமைச் செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்துறை செயலாளர் ராஜகோபால், டிஜிபி ராமானுஜம், ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வடகிழக்கு மாநிலத்தவருக்கு தக்க பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+