5 வழக்குகளில் 9 பேரின் மரண தண்டனை தீர்ப்புகள் தவறானவை: முன்னாள் நீதிபதிள்
டெல்லி: உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 9 மரண தண்டனை தீர்ப்புகள் தவறானவை என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் 14 பேர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர் மொகித் செளத்ரியின் ஒருங்கிணைப்பில் 14 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்புகளை ஆராய்ந்தது. அதன் பின்னர் 5 வழக்குகளில் 9 பேருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. 1980-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் "அரிதான வழக்கு" எது என்பதற்கு அளித்த வரையறைக்கு எதிரானதாக இந்த வழக்குகளின் தீர்ப்புகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே கையெழுத்திட்ட கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நீதிபதிகளில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் அடக்கம்.












Click it and Unblock the Notifications