தமிழக மீனவர்களை காக்கக் கோரி பிரதமர், சோனியாவை சந்தித்த திமுக எம்.பிக்கள்
டெல்லி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர்.
திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று டெல்லியில் சந்தி்த்து பேசினர். அப்போது அவர்கள் அண்மையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையை பிரதமரிடம் அளித்தனர். மேலும் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுமாறு அவர்கள் பிரதமரை வலியுறுத்தினர்.
இது தவிர தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அவர் இந்த விவகாரம் குறித்து பிரதமருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று மீனவர் பிரச்சனை குறித்து கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications