"கல்லும் முள்ளும்" காலம் மலையேறிவிட்டது! இனி ஹெலிகாப்டரில் அய்யப்பனை தரிசனம் செய்யலாம்

Subscribe to Oneindia Tamil

Helicopter
கொச்சி: "கல்லும் முள்ளும்..காலுக்கு மெத்தை" என்று சரணகோஷம் எழுப்பியபடி அய்யப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த பாதயாத்திரை ஹெலிகாப்டர் யாத்திரையாக உருமாறிவிட்டது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிப்சான் ஏ யேசன் என்ற நிறுவனம் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியிருக்கிறது. 5 பேர் பயணம் செய்ய ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பாபு, ஹெலிகாப்டர் சேவை நிறுவன இயக்குநர் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சபரிமலையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ள பெருநாடு என்ற இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சாலைமார்க்கமாக அடிவாரமான பம்பைக்கு சொகுசு காரில் அழைத்துச் செல்லப்படுவர்.

சபரிமலையில் அய்யப்பசாமி கோவில் நடை திறக்கப்படும் நாட்களில் இந்த ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை நடத்தப்படும். ஹெலிகாப்டரில் பைலட் தவிர 5 பேர் பயணம் செய்யலாம்.

சராசரியாக மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர், ஒரு மணி நேரத்தில் கொச்சியில் இருந்து பெருநாடு சென்றடையும். இதேபோல் கொச்சியில் இருந்து குருவாயூர் கோயிலுக்கும் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+