இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸி. செல்ல முயன்ற 50 தமிழர், 19 சிங்களர் கைது
Subscribe to Oneindia Tamil
நீர்க் கொழும்பு: இலங்கையிலிருந்து மீன்பிடி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 50 தமிழர்கள் மற்றும் 19 சிங்களரை இன்று காலை இலங்கை கடற்படை வழிமறித்தது.
இலங்கையின் நீர்க்கொழும்பு கடற்பரப்பில் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகை இலங்கை கடற்படை இன்று காலை இடைமறித்தது. அந்த படகில் நீர்க்கொழும்பு, புல்மோட்டை, வவுனியா, மன்னார், விசுவமடு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தோர் இருந்துள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்வதாக கடற்படையினரிடம் தெரிவித்தனர். அனைவரையும் கைது செய்த கடற்படை காவல்துறையின் சிஐடி பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் இருந்து நாள்தோறும் தமிழர்கள் மட்டுமின்றி சிங்களவரும் அதிகளாக வெளியேறி வருவது தொடர் கதையாகிவிட்டது.












Click it and Unblock the Notifications