இலங்கையில் இருந்து மீன்பிடி படகுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 69 தமிழர், 14 சிங்களர் கைது

Subscribe to Oneindia Tamil

திருகோணமலை: இலங்கையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மூலம் 2 படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்ல முயன்ற 69 தமிழர்கள் உட்பட 83 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை கடற்பரப்பின் கிழக்குப் பகுதியில் சுமார் 15 கடல் மைல் தொலைவில் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த 2 படகுகளை நேற்று காலை இலங்கை கடற்படை வழிமறித்தது.

அதில் ஒரு படகில் 31 தமிழரும், 8 சிங்களரும் இருந்துள்ளனர். மற்றொரு படகில் 38 தமிழர்களும் 6 சிங்களரும் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தபப்ட்டனர்.

இந்த ஆண்டில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்வதற்காக பயன்படுத்தபப்ட்ட 25 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இப்படகுகளில் பயணம் செய்த மொத்தம் 1047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+