சண்டிகர் பார்ட்டியில் பப்ளிக்காகவே 'கசமுசா'... ரெய்டு போன போலீஸ் 'ஷாக்'!
சண்டிகர்: சண்டிகரில் நடந்த ஒரு பார்ட்டியில் கசமுசாக்கள் நடப்பதாக தகவல் கிடைத்து ரெய்டுக்குப் போன போலீஸார், அங்கு பகிரங்கமாகவே உடலுறவு உள்ளிட்ட அத்தனையும் நடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கசமுசா செயல்கள் தொடர்பாக 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சண்டிகரில் உள்ள ஒரு கிளப்பி்தான் இந்த அக்கப்போர் நடந்தது. சண்டிகர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள் இங்கு நடந்த பார்ட்டிகளில் கலந்து கொண்டு பப்ளிக்காவே உறவு கொண்டு அட்டகாசம் செய்துள்ளனர்.
கிளப்புக்குள் போலீஸார் போனபோது ஆங்காங்கே கிடைத்த இடங்களிலெல்லாம் ஆணும், பெண்ணுமாக பின்னிப் பிணைந்து கிடந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியாகி விட்டார்களாம். போலீஸாரைப் பார்த்த ஜோடிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளப் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications