கடலூர் மருத்துவமனையில் தாயிடமிருந்து நூதன முறையில் பெண் குழந்தை திருட்டு
கடலூர்: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நூதன முறையில் பச்சிளம் பெண் குழந்தையை தாயிடம் திருடிவிட்டு ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த பிரகாஷின் மனைவி கிருஷ்ணவேணி பிரசவத்துக்காக கடந்த 27-ந் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அன்று இரவே பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் இன்குபெட்டர் கருவியில் குழநதை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழந்தைக்கு அல்ட்ரா ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்கேன் அறைக்கு குழந்தையுடன் சென்று அவர் காத்திருந்தார். அப்போது அங்கு நடமாடிக் கொண்டிருந்த ஒரு நபர் கிருஷ்ணவேயிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் கையில் இருந்த மருந்துசீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு இதில் டாக்டரின் கையெழுத்து தேவைப்படும்.. அதனால் டாக்டரிடம் போய் கையெழுத்து வாங்கி வருமாறும் அதுவரை தாம் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அந்த மர்ம நபர் கூறியிருக்கிறார். இதை நம்பிச் சென்ற கிருஷ்ணவேணியிடம் அங்கிருந்த நர்சு ஒருவர் டாக்டர் கையெழுத்து போட்டுவிட்டார் என்று கூறியிருக்கிறார். மீண்டும் ஸ்கேன் அறைக்கு அந்த பெண் வந்தபோது தமது குழந்தையுடன் மர்ம நபர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. நூதன முறையில் குழந்தையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications