யேல் பல்கலை. ஆட்சிமனறக் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய இந்திய அமெரிக்கர் பரீத் ஜகாரியா ராஜினாமா
Subscribe to Oneindia Tamil

பரீத் ஜகாரியாவின் கட்டுரைகள் தொடர்பான புகார் வந்ததையடுத்து தாம் பிறரது கட்டுரைகளில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்தது உண்மை என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து சி.என்.என். தொலைக்காட்சி மற்றும் டைம் பத்திரிகை அவரை சஸ்பெண்ட் செய்தது. பின்னர் அவரது சஸ்பெண்ட்டை இரண்டு நிர்வாகங்களும் விலக்கிக் கொண்டன.
இந்நிலையில் யேல் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து தாம் ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமையன்று ஜகாரியா ராஜினாமா செய்திருக்கிறார். யேல் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் முன்னாள் மாணவர்களும் அங்கம் வகிக்கின்றனர். அந்த வகையில் யேல் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஜகாரியாவும் இடம்பெற்றிருந்ததார்.












Click it and Unblock the Notifications