மன்மோகன், கட்காரி வீடுகள் முன் போராட்டம் நடந்த ஹஸாரே குழுவுக்கு அனுமதி இல்லை - பலத்த பாதுகாப்பு!!

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கேடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தை முடக்கி போட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
அதே சமயம், ஹசாரே குழுவினர் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டு கட்சிகள் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை இரண்டு கட்சிகளும் மூடி மறைக்கப் பார்க்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இதை கண்டித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், பாரதீய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்காரி ஆகியோர் வீடுகள் முன்பு ஞாயிற்றுக்கிழமை (நாளை) முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக ஹசாரே குழுவினர் அறிவித்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் இதில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் முன்னெச்சரிக்கையாக, மத்திய அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மன்மோகன் சிங், நிதின்கட்காரி வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்களது வீடுகளுக்கு செல்லும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய டெல்லியில் உள்ள பெரும்பாலான மெட்ரோ ரெயில் நிலையங்கள் நாளை மூடப்படுகின்றன.
மத்திய செயலகம், உத்யோக்பவன், படேல்சவுந், ரேஸ்கோர்ஸ், ஜோர்பேக், கான் மார்க்கெட் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடி இருக்கும் என்று மெட்ரோ ரெயில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications