வெற்றிகரமாக நடந்த பிரித்வி -2 ஏவுகணை சோதனை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று எதிரியின் இலக்கைத் தாக்கும் பிரித்வி- 2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் தளத்தில் இருந்து இன்று முற்பகல் 11.03 மணிக்கு இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஏவுகணை, இலக்கு தூரமான 350 கிமீட்டர் தொலைவை முழுவதுமாக சென்றடைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications