மீடியாவை தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்- திருமாவளவன்
சென்னை: ஊடகத் துறையின் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதையும், நிர்ப்பந்தங்கள் உருவாக்குவதையும் விடுதலைச் சிறுத்தைகள் வேடிக்கைப் பார்த்து கொண்டு இருக்காது. நசுக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்று தொல்.திருமாவளன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கடந்த வாரம் ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த ஒரு மாணவியின் தற்கொலையை படம் பிடிக்க வந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் ஆல்பின் மேத்யூ ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேத்யூ அவர்களின் கேமரா சேதப்படுத்தப்பட்டு, அவருக்கு ரத்த காயம் ஏற்படும் அளவுக்கு ஐ.ஐ.டி வளாகத்தில் அவர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் தான் மேத்யூவை மீட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் மீது சென்னைக்கு அருகில் அவர்கள் குவாரிகளை படமெடுத்த போது தாக்குதல் நடத்தப்பட்டதையும் விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக கண்டிக்கிறது.
இந்த நிலையில் ஐ.ஐ.டி விவகாரம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற பத்திரிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட இணை ஆணையாளர் சேஷசாயியின் செயலும் கண்டனத்துக்குரியது.
ஒரு சாலை மறியலுக்கு பிறகே அவர்கள் கொடுத்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல. தவிர தாக்கப்பட்ட புகைப்பட கலைஞருக்கு எதிராக ஐ.ஐ.டி பேராசிரியர் கொடுத்த பொய் புகாரை, காவல் துறை எந்த விசாரணையும் செய்யாமல் பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
ஐ.ஐ.டி என்கிற கல்வி நிறுவனம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை விடுதலை சிறுத்தைகள் சுட்டிக் காட்ட விரும்புகிறது. அங்கு நடப்பதை குறித்து செய்தி சேகரிக்க முற்படும் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு ஊடக சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதையும், நிர்ப்பந்தங்கள் உருவாக்குவதையும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு அமைப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறது.
எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் எந்தவித பாரபட்சமுமின்றி நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. அப்படி காவல்துறை செயல்படாத பட்சத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நேரடியாக களத்தில் இறங்கி நசுக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications