ஈரானில் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து "நலம்" விசாரிக்கப் போகிறார் மன்மோகன்சிங்?

Subscribe to Oneindia Tamil

Manmohan Sigh and Rajapaksa
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஹ்ரானில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் அணிசேரா நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ஈரானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நாளை புறப்பட்டுச் செல்கிறார். அவர் 3 நாட்கள் அங்கு தங்குகிறார்.

இந்த பயணத்தின் போது வெளிநாட்டுத் தலைவர்களையும் மன்மோகன்சிங் சந்திக்க உள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்குமாறும் ராஜபக்சே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய- இலங்கை உறவு பற்றி பேசுவார்களா? தமிழர் பிரச்சனை குறித்து இருவரும் விவாதிப்பார்களா? அல்லது தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி மன்மோகன்சிங் கண்டனம் தெரிவிப்பாரா? என்பது பற்றி தகவல்கள் எதுவும் இல்லை. இது ஒரு வழக்கமான "நலம் விசாரித்தல்" சந்திப்பாகவே இருக்கக் கூடும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+