பிரதமரையும்,கத்காரியையும் நல்லா போட்டு வாங்குறீங்க கேஜ்ரிவால்...அன்னா பாராட்டு!!!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தனது புதிய பிளாக்கில் அன்னா எழுதுகையில், காங்கிரஸையும், பாஜகவையும் பாரபட்சமில்லாமல் திட்டுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளுக்கு இந்த இரு கட்சிகளுமே பொறுப்பாகும். டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைதிப் போராட்டம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும்.
2வது சுதந்திரப் போர் தொடங்குவதாக இருந்தால் அதில் நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும். அதற்கு போலீஸாரின் லத்திகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் துப்பாக்கிக் குண்டுகளையும் நாம் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். டெல்லியில்இளைஞர்கள் காட்டிய வேகமும், தீரமும் என்னை வியப்படைய வைத்துள்ளது. இது காட்டுத் தீ போல நாடு முழுவதும் பரவ வேண்டும் என்று கூறியுள்ளார் அன்னா.












Click it and Unblock the Notifications