மன்மோகனை தூக்கிவிட்டு ராகுலை பிரமதராக்க முயலும் காங்.- முலாயம் கட்சி தலைவர் குற்றச்சாட்டு
டெல்லி: நிலக்கரி ஊழல் பிரச்சனை தொடர்பாக பிரதமர் பதவி விலக வேண்டும் பாஜக பிரச்சனை செய்து வருவதற்கு பின்னால் சில காங்கிரஸார் உள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் மோகன் சிங் தெரிவி்த்துள்ளார்.
ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல் பிரச்சனைக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த பிரச்சனையால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி தலைவர் மோகன் சிங் கூறுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரச்சனை செய்து வருவதற்கு பின்னால் சில காங்கிரஸார் உள்ளனர். அவர்கள் மன்மோகன் சிங்கை நீக்கிவிட்டு ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றார்.
இதைவிட பெரிய கற்பனை இருக்க முடியாது என்று மோகனின் கருத்து பற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார். வரும் 2014ம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தான் பிரதமராக இருப்பார் என்று காங்கிரஸ் பலமுறை அறிவித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications