எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனித நிலையை மறந்து யாரும் யாருடனும் கூடலாம் என்ற நிலை ஏற்பட்டபின்பே எய்ட்ஸ் போன் ற கொடிய நோய்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. எச்.ஐ.வி எனப்படும் வைரஸ் தாக்குதல் குறித்தும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்தும் பலவித விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் ஆண்டுக்காண்டு எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதான் போகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் 1.54 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளுடன் 3வது இடத்தில் இருந்த தமிழகத்தில் புதிதாக இந்த நேயால் தாக்கப்படுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் தேசிய அளவில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழகம்.
ஆனால், அதிகமான எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. இங்கு 2.5 லட்சம் நேயாளிகள் உள்ளனர். 3வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் 1.67 லட்சம் எய்ட்ஸ் நேயாளிகளுடன் உள்ளது.
ஆந்திராவில் படிப்பறிவின்மை, வேலையின்மை, போன்ற பிரச்சினைகளும் எச்.ஐ.வி நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எய்ட்ஸ்சினை கட்டுப்படுத்த சரியான பிரச்சார உத்திகளை பயன்படுத்த முடியாமல் ஆந்திரா அரசு தோல்வியடைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் ஆந்திராவில் 9,363 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 7,400 பேரும், தமிழகத்தில் 3,532 பேரும், டெல்லியில் 1656 பேரும், கேரளாவில் 550 பேரும் எச்.ஐ.வி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று.
மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதும் சில மாநிலங்களில் மட்டுமே எச்ஐவியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications