மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் துப்பாக்கி, ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேர்

தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை மேற்குத் தொடர்ச்சி மலை சுமார் 400 கிமீ தூரம் பரந்து விரிந்துள்ளது. இம்மலைப்பகுதியை ஒட்டியுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து தமிழக அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நக்சலைட் கும்பல் தலைவன் விவேக்கை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த பெண் தப்பியோடிவிட்டார். பிடிப்பட்ட நக்சலைட் தீவிரவாதியும், தப்பியோடிய பெண்ணும் தேனி மாவட்டத்தில் உள்ள முருகமலையில் நக்லைட்டுகளுக்கு பயிற்சி அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக அதிரடிப்படையினர் ஒரு சப்இன்ஸ்பெடர் தலைமையில் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்சல் கும்பல் நடமாட்டம் உள்ளதா என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக வனப்பகுதியில் 15 நக்சலைட்டுகள் நீலகிரி வனப்பகுதி வழியாக ஊடுருவி இருப்பதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தியமங்கலம், தேனி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வனச்சரக அலுவலர் கருமலையான் தலைமையில் வனக்காப்பாளர்கள் சின்னசாமி, ஜெய்சங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சதுரகிரி மலை அடிவாரத்தில் ரோந்து சென்றனர். வாழைதோப்பு பாலம் அருகே நளளிரவில் ஒரு கார் நிற்பதை பார்த்தனர். அந்த காரை சுற்றி வளைத்து அதில் இருந்த 6 பேரை பிடித்து விசாரித்த போது மதுரையில் நடந்த துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்கு வந்ததாகவும், காரை நிறுத்தி சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினர். வனத்துறையினர் காரை சோதனை போட்டபோது 2 துப்பாக்கி, 24 தோட்டாக்கள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுதது அவர்கள் பேரையூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்களா, அல்லது நக்சலைட்டுகளுடன் தொடர்புடையவர்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications