கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?

பாகிஸ்தானிலிருந்து வந்து 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மும்பையில் வெறியாட்டம் போட்ட 10 தீவிரவாதிகளில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. அவனை உயிருடன் பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். அவரை தீவிரவாதிகள் படுகொலை செய்து விட்டனர்.
பிடிபட்ட கசாப் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளான். அவனுக்காக பெரும் பொருட் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறான்.
தற்போது அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கசாப்பை தூக்கிலிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கிலிடுவதற்கான தேதியை ஆர்தர் சாலை சிறை நிர்வாகம்தான் முடிவு செய்து அறிவிக்கும். உடனடியாக தேதியை சிறை நிர்வாகம் அறிவிக்கும். அதுதான் வழக்கம். தேதி முடிவு செய்யப்பட்ட பின்னர் கசாப்பைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறும். முதலி்ல தூக்கிலிடுவதற்கான இடம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்படும். தூக்கிலிடுவதற்கான ஆளைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்படும். தூக்குக் கயிறு வாங்கப்படும்.
தினசரி இனி அவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். உடல் நலப் பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்.
இருப்பினும் இதெல்லாம் ஒருபக்கம் நடந்து வந்தாலும் கூட இன்னும் கூட கசாப்புக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது குடியரசுத் தலைவரின் கருணைதான் அது. இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குடியரசுத் தலைவரிடமிருந்து கருணையை எதிர்பார்த்து மனு செய்யலாம். அதில் குடியரசுத் தலைவர் நினைத்தால் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்க முடியும். எனவே கசாப்புக்கும் கூட அந்த வாய்ப்பு உள்ளதால் அவனும் கருணை கோருவான் என்று தெரிகிறது.
கருணை மனுக்கள் மீ்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு எந்தவித நிர்ப்பந்தமும், கால வரையறை இல்லை என்பதால் அதில் எப்போது முடிவு வரும் என்பது பெரும் கேள்விக்குறியான விஷயம்தான். எனவே கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications