சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர் அலுவலகம் முற்றுகை
சென்னை: சென்னை சட்டக்கல்லூரிக்குள் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் வந்தார்கள். கல்லூரிக்குள் போலீசார் நுழைந்ததை கண்டித்து மாணவர்கள் முதல்வர் அறையை முற்றுகையிட்டு 2 மணிநேரம் போராட்டம் நடத்தினர்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. விபரீதங்கள் எதுவும் நடக்கும் முன்பே முதல்வர் நாராயணபெருமாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த உடன் சென்னை உயர் நீதிமன்ற உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் 30 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரிக்கு வந்தது. அப்போது ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு பிரிவினரை ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த போலீசார் இரு பிரிவினரையும் பிரித்துவிட்டு அவர்களுக்கு நடுவே சுவர் போன்று நின்றனர். இதையடுத்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினர். போலீசார் சரியான நேரத்தில் வந்ததால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர்கள் மகேஷ்வரன், லட்சுமி, உதவி கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், குமார் மற்றும் 100 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரி வாசலில் வந்து நின்றது.
இதற்கிடையே கல்லூரிக்குள் போலீஸ் நுழைந்ததை கண்டித்து வளாகத்தில் இருந்த மாணவர் படை பிரிவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு மாணவர் க்லலூரி வளாகத்தில் இருந்த உயரமான கட்டிடத்தில் ஏறிக்கொண்டு அங்கிருந்து கீழே குதி்த்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து கல்லூரிக்குள் இருந்த போலீசார் வெளியேறினர்.
போலீசார் வெளியேறியவுடன் மாணவர்கள் முதல்வரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல்வரும், பேராசிரியர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பவர்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறுகையில்,
கடந்த மாதம் 16ம் தேதி ஏழுமலை என்ற முன்னாள் மாணவர் தாக்கப்பட்டதையடுத்து 14 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் 4 மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் வேறு சட்டக்கல்லூரிக்கு மாற்ற வேண்டும். அவர்களால் பிற மாணவர்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது கூட அவர்களின் ஆதரவாளர்கள் 4 மாணவர்களை தாக்கியதால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
4 மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications