ஜான் பிரபாகரனின் ரூ500 கோடி மோசடி- குவியும் புகார்கள்- பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்
சென்னை: கிறிஸ்தவ போதர்களிடமும் பொதுமக்களிடமும் ரூ500 கோடி மோசடி செய்த ஜான்பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார்கள் குவிந்து கொண்டே வருகின்றனர். இதனால் இந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது.
ரூ.2,100 கட்டினால், ஆண்டு முடிவில் ரூ.13 ஆயிரத்து 750 கிடைக்கும் என்பதுதான் ஜான் பிரபாகரனின் வசீக பிரச்சாரம். இதை நம்பி கிறிஸ்தவ போதகர்களும் பொதுமக்களும் இழந்த தொகை ரூ500 கோடி! ஜான்பிரபாகரனை நம்பி பொதுமக்களிடம் வசூலித்து ஏமாந்த போதர்கள் ஏராளம்! சென்னையில் ஹிம் என்ற அறக்கட்டளையின் பெயரில் இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தி பொதுமக்கள் பணத்தை விழுங்கியிருக்கிறது ஜான்பிரபாகரன் கும்பல்! இதில் ஜான்பிரபாகரனும் அவரது கோஷ்டியும் "கர்த்தர்தான் வட்டி கொடுக்கிறார்" என்று கூறியே ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் ஹைலைட்!
இவர்கள் மீது தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் காஞ்சிபுரம் மாவட்டம் வேம்பனூரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்றும் புகார் கொடுத்தனர்.
தமிழகத்தில் மட்டுமின்றி வேறு மாநிலங்களிலும் மோசடி நடந்திருப்பதால் சென்னை மாநகர காவல்துறையினர் இந்த மோசடிப் புகாரை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்ற காவல்துறை தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அப்படி பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்படும்போது எஸ்.பி. தகுதியிலான காவல்துறை அதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
ஆந்திர சிறையில் ஜான் பிரபாகரன்
முக்கிய குற்றவாளியான ஜான் பிரபாகரன் இதேபோன்ற மோசடி வழக்கில் ஆந்திர மாநிலத்தில் சிறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications