செப்டம்பர் 20ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம்?

காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பல முறை கடிதம் எழுதியிருந்தார். ஆனால் வழக்கம்போல மன்மோகன்சிங் அரசு கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்தது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது காவிரி ஆணையத்தைக் கூட்டாத மத்திய அரசு வெளுத்து வாங்கியதது உச்சநீதிமன்றம்.
மேலும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துக்கான தேதியை மத்திய அரசு தீர்மானிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே தேதியை அறிவித்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதனால் இம்மாத இறுதியில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு...
இதனிடையே காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 20-ந் தேதி நடைபெறக் கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் கூடுகிறது.
கடைசியாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications