தமிழகத்துக்கு இலங்கையர் செல்ல வேண்டாம்: இலங்கை அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சிங்கள ராணுவத்தினருக்கு மட்டுமின்றி சிங்கள விளையாட்டு வீரர்கள், சிங்களவர்கள் என அனைத்து இலங்கையருக்குமே கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. நேற்றுகூட பூண்டி மாதா திருக்கோயிலுக்கு வந்த 184 சிங்களவருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசின் குடிமக்கள் எவரும் இந்த தமிழ் மண்ணில் வரக்கூடாது என்ற நிலை உருவாகி உள்ளதால் வேறுவழியின்றி இலங்கை அரசு இப்படி ஒரு எச்சரிக்கையை விடுவித்து உள்ளது.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் செல்லுகின்ற இலங்கை குடிமக்களுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் பயண ௭ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் நாட்டுக்கு செல்லுகின்ற இலங்கையர்கள் சமீபகாலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றனர். ௭னவே இலங்கையர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே இப்பயண ௭ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏனைய மாநிலங்களுக்கு செல்வதில் ௭வ்விதமான பிரச்சினைகளும் இல்லை.
தமிழ்நாட்டுக்கு சென்ற இலங்கை சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள், விளையாட்டு, கலாசார துறைசார்ந்தோர் மற்றும் தொழில் முறை பயிற்சிக்காக செல்பவர்கள் ௭ன பலதரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றனர். இலங்கை பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் ௭டுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கேட்டுகொண்டிருக்கின்றது.
அச்சுறுத்தல் காரணமாக இலங்கையைச் சேர்ந்த 184 யாத்திரிகர்கள் தஞ்சாவூர் பூண்டி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்திய அரசு மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ௭டுக்கப்பட்டுள்ளன. தமிழகம் செல்லும் இலங்கையர் சென்னையில் உள்ள துணை தூதரகத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்ய கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications