மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. முதலிடத்தில் பெங்களூர்- 4வது இடத்தில் சென்னை!

Subscribe to Oneindia Tamil

Leap of death: Delhi third among cities
சென்னை: மாடியில் இருந்து குதித்து தற்கொலைகள் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை பெங்களூரில் அதிகரித்து வருகிறது. 2006 முதல் 2011ம் ஆண்டுவரை இந்த நகரத்தில் மட்டும் 428 பேர் மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டிருகின்றனர். இதில் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்தான் அதிகம்.

டெல்லியில் 132 பேரும் அகமதாபாத்தில் 102 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னையில் 100 பேர் வரை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வலி நிறைந்த புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் ஆவண காப்பகம்

சட்டென்று வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இளையதலைமுறையினர் இன்றைக்கு பெருகி வருகின்றனர். தூக்குப் போட்டுக்கொள்வது, மாடியில் இருந்து குதித்து உயிர்விடுவது, விஷம் குடிப்பது, ரயில்முன் பாய்வது என சடுதியில் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். உயிருக்கு விலை கிடையாது. அற்ப விசயத்திற்காக மனதொடிந்து போய் விலைமதிப்பில்லாத உயிரை மாய்த்துக்கொள்கின்றனர் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

நாடுமுழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மேற்கு வங்க மாநிலம் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இங்குமட்டும் 556 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 527 பேரும் ஆந்திராவில் 493 பேரும் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம் ஒன்று. மகாராட்டிரா மாநிலத்தில் 453 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும் தேசிய குற்றப்புலனாய்வு நிறுவனத்தின் புள்ளிவிபரத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் கொல்கத்தா நகரில் மட்டும் உயரமான கட்டடத்தின் மேலிருந்து குதித்து உயிரை விடுபவர்களின் எண்ணிக்கை கடந்த 6 ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர் மனநலமருத்துவர்கள். இதற்குக் காரணம் ஏமாற்றம், விரக்தியின் உச்சத்தில் எடுக்கப்படும் முடிவுதான் இது என்கிறார் KEM மருத்துவமனையின் உளவியல் பிரிவு நிபுணர்.

2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் மும்பை முதலிடத்தில் இருந்தது. 33 பேர் வரை மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டுள்ளனர். பின்னர் இது படிப்படியாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு 21 பேர் வரை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளனர். மும்பை நகரில் 2008 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டுவரை 30 வயதிற்குட்பட்ட பெண்கள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேசமயம் 45 வயது முதல் 59 வயது வரை உடைய ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நமக்கு யாரும் உதவிக்கு இல்லை. கைவிடப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் தோன்றும் போதும், ஒருவித நம்பிக்கையின்மையும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்று தற்கொலைக்கு தூண்டுகிறது. இதுபோன்ற சூழலில் தனித்து விடப்படுவதும் தற்கொலை செய்து கொள்ள காரணமாகிறது. எனவே ஏமாற்றமடைந்தோ, விரக்தியுடனே இருப்பவர்களிடம் அமைதியாக பேசி அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்ற முயலவேண்டும் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்வது என்பது வலி நிறைந்தது. அது உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கப்படும் முடிவுதான். எனவே அதுபோன்ற தருணங்களில் அவர்களை உயரமான கட்டடங்களின் மீது ஏறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்.

தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதை விடவோ, வேறு விதமான பொருட்களின் மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதை விட இது எளிதானது என்று முடிவெடுப்பதினாலேயே மாடியில் ஏறி உடனே கீழே குதித்து உடனே உயிரை விட்டு விடுகின்றனர். வாழ்வது ஒருமுறைதான் போராட்டம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டாலே வாழ்க்கையை ருசியுடன் வாழலாம். அதை விடுத்து தற்கொலை செய்து கொள்வது என்பது கோழைத்தனமானது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+