டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுக்க ஐ.நா. செல்லும் மு.க.ஸ்டாலின்

கடந்த மாதம் 12ம் தேதி சென்னையில் உள்ளை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை டி.ஆர். பாலு தலைமையிலான திமுக எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த 21ம் தேதி சந்தித்து அளித்தது. மேலும் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுமாறு அந்த குழு பிரதமரை வலியுறுத்தியது.
டெசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா.சபையிடம் அளிக்கப்படும் என்று திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தீர்மானங்களை கொடுக்க திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலும் விரைவில் ஐ.நா. சபைக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் ஐ.நா. அதிகாரிகளிடம் தீர்மானங்களை சமர்பித்துவிட்டு அவற்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஈழம் தான் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் சிறையில் வீரபாண்டியாரை சந்தித்த ஸ்டாலின்:
வேலூர் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக பொருளாளர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஏற்கனவே வந்து சந்தித்த மு.க. ஸ்டாலின் இன்று காலை மீண்டும் சந்தித்து பேசினார்.
ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, முரசொலி செல்வம், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் காந்தி ஆகியோர் சென்றிருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 3 மாத காலமாக சிறையில் வாடுகிறார். அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக தெம்பாக உள்ளார். எத்தனை பொய் வழக்குகள் தொடர்ந்தாலும் அவற்றை சந்திக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து என்னிடம் விசாரித்தார்.
திமுகவினரைப் பழி வாங்கவே அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. ஆனால் நீதிமன்றங்களில் நீதியை நிலைநாட்டி திமுகவினர் விடுதலை பெற்றுவிடுகின்றனர். வீரபாண்டி ஆறுமுகம் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் பொய் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து அவர் விடுதலை ஆவார். ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டுள்ள எந்த குண்டர் சட்டமும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோன்று தான் வீரபாண்டி ஆறுமுகம் மீது போடப்பட்டுள்ள வழக்கும் முடியும் என்றார்.
-
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
தேர்தல் நேரத்தில் 3 மாவட்ட இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. "மினி டைடல் பார்க்" அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications