டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுக்க ஐ.நா. செல்லும் மு.க.ஸ்டாலின்

கடந்த மாதம் 12ம் தேதி சென்னையில் உள்ளை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை டி.ஆர். பாலு தலைமையிலான திமுக எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த 21ம் தேதி சந்தித்து அளித்தது. மேலும் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுமாறு அந்த குழு பிரதமரை வலியுறுத்தியது.
டெசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா.சபையிடம் அளிக்கப்படும் என்று திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தீர்மானங்களை கொடுக்க திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலும் விரைவில் ஐ.நா. சபைக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் ஐ.நா. அதிகாரிகளிடம் தீர்மானங்களை சமர்பித்துவிட்டு அவற்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஈழம் தான் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் சிறையில் வீரபாண்டியாரை சந்தித்த ஸ்டாலின்:
வேலூர் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக பொருளாளர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஏற்கனவே வந்து சந்தித்த மு.க. ஸ்டாலின் இன்று காலை மீண்டும் சந்தித்து பேசினார்.
ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, முரசொலி செல்வம், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் காந்தி ஆகியோர் சென்றிருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 3 மாத காலமாக சிறையில் வாடுகிறார். அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக தெம்பாக உள்ளார். எத்தனை பொய் வழக்குகள் தொடர்ந்தாலும் அவற்றை சந்திக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து என்னிடம் விசாரித்தார்.
திமுகவினரைப் பழி வாங்கவே அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. ஆனால் நீதிமன்றங்களில் நீதியை நிலைநாட்டி திமுகவினர் விடுதலை பெற்றுவிடுகின்றனர். வீரபாண்டி ஆறுமுகம் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் பொய் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து அவர் விடுதலை ஆவார். ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டுள்ள எந்த குண்டர் சட்டமும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோன்று தான் வீரபாண்டி ஆறுமுகம் மீது போடப்பட்டுள்ள வழக்கும் முடியும் என்றார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications