வேலூர், நாமக்கல், காஞ்சி, அரியலூர் கலெக்டர்கள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உள்பட 4 மாவட்ட கலெக்டர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஹனிஷ் சாப்ரா, வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் அஜய் யாதவ் நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும், நாமக்கல் கலெக்டர் ஜே.குமரகுருபரன், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராகவும், அரியலூர் கலெக்டர் அனு ஜார்ஜ், பொதுத்துறை (புரோட்டோகால்) இணை செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேளாண்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றிய எல்.சித்திரசேனன் காஞ்சிபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பி.சங்கர் வேலூர் மாவட்ட கலெக்டராகவும், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த டி.ஜெகநாதன் நாமக்கல் மாவட்ட கலெக்டராகவும், பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றிய பி.செந்தில்குமார் அரியலூர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications