காற்றாலைகள் நிற்கப் போகுது.. பெரும் மின் தட்டுப்பாடுக்கு தயாராகுங்கள்!

தமிழகத்தில் நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்கள், நீரால் இயங்கும் புனல் நிலையங்கள், டீசல் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால், தமிழக மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சார உற்பத்தி குறைந்ததாலும் மத்திய அரசின் மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும் மாநிலத்தில் கடும் மின்தடை நிலவுகிறது.
காற்றாலைகளி் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் நேற்று மின்தடை நேரம் ஓரளவு குறைக்கப்பட்டது.
அணைக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகள் மூலம் கடந்த ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்த காலகட்டத்தில் 214 கோடி யூனிட் புனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் ஜுன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் 60 சதவீத மின்சாரம் உற்பத்தி குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் காற்றாலைகள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நடப்பாண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 750 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பருவ மழை பொய்த்ததால் நீர்நிலைகள் மூலம் உற்பத்தி செய்யாத மின்சாரத்தை, காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ததால் நிலமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.
இந் நிலையில் செப்டம்பர் இறுதியில் காற்றின் அளவு குறைவது வழக்கம். இதனால் காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி குறைந்து விடும். பிறகு அக்டோபர் மாத மத்தியில் தான் வடகிழக்கு பருவ மழை தொடங்கும். அப்போது காற்றும் அதிகரித்து மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.
இதனால் செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் இரண்டு வாரம் வரை, காற்றாலை மின்சார உற்பத்தி பெருமளவு குறையும்.
ஏற்கனவே, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் காற்றாலைகளும் 3 வாரத்துக்கு முடங்கினால், தமிழகத்தில் பெரும் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் நிலமையை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை அதிகரிக்குமாறு மத்திய அரசை கோர தமிழகம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு தந்துட்டாலும்...!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications