நீரா ராடியா: 5,800 தொலைபேசி உரையாடல்களையும் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ், டாடா நிறுவனம் உள்ளிட்டவை தொடர்பாக நீரா ராடியா பேசிய டேப் வெளியானது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது.
தங்கள் நிறுவனம் தொடர்பாக வெளியான நீரா ராடியா டேப் குறி்த்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று டாடா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தங்கள் தரப்பிலிருந்து இந்த டேப் வெளியாகவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் தந்தது. ஆனால், மத்திய அரசின் இந்த பதில் குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், டேப் விவகாரம் வெளியானது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணையை நடத்தவில்லை என்றும், இதுவரை நடைபெற்றுள்ள விசாரணையில் திருப்தி இல்லை என்றும் கூறியிருந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, நீரா ராடியாவின் இடைமறிக்கப்பட்ட 5,800 தொலைபேசி உரையாடல்களையும் நகல் எடுக்கும் பணி முடியவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், நாட்டின் பாதுகாப்புக்கு ஐயம் விளைவிக்கும் காரணிகள் இருந்தும் கூட, இடைமறிக்கப்பட்ட அனைத்து தொலைபேசி உரையாடல்களின் நகல்களையும் வருமான வரித்துறை சேகரிக்காதது கண்டனத்துக்குரியது.
தொலைபேசி உரையாடல்களை கண்டிப்பாக நகல் எடுக்க வேண்டும். ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்த அதிகாரிகள் குழுவிடம் அதைப் பெற்று, அதன் நகல்களை தகுந்த ஆதாரங்களுடன் தொகுத்து, 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை இயக்குனருக்கு (விசாரணை) உத்தரவிட்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications