நீரா ராடியா: 5,800 தொலைபேசி உரையாடல்களையும் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ், டாடா நிறுவனம் உள்ளிட்டவை தொடர்பாக நீரா ராடியா பேசிய டேப் வெளியானது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது.
தங்கள் நிறுவனம் தொடர்பாக வெளியான நீரா ராடியா டேப் குறி்த்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று டாடா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தங்கள் தரப்பிலிருந்து இந்த டேப் வெளியாகவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் தந்தது. ஆனால், மத்திய அரசின் இந்த பதில் குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், டேப் விவகாரம் வெளியானது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணையை நடத்தவில்லை என்றும், இதுவரை நடைபெற்றுள்ள விசாரணையில் திருப்தி இல்லை என்றும் கூறியிருந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, நீரா ராடியாவின் இடைமறிக்கப்பட்ட 5,800 தொலைபேசி உரையாடல்களையும் நகல் எடுக்கும் பணி முடியவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், நாட்டின் பாதுகாப்புக்கு ஐயம் விளைவிக்கும் காரணிகள் இருந்தும் கூட, இடைமறிக்கப்பட்ட அனைத்து தொலைபேசி உரையாடல்களின் நகல்களையும் வருமான வரித்துறை சேகரிக்காதது கண்டனத்துக்குரியது.
தொலைபேசி உரையாடல்களை கண்டிப்பாக நகல் எடுக்க வேண்டும். ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்த அதிகாரிகள் குழுவிடம் அதைப் பெற்று, அதன் நகல்களை தகுந்த ஆதாரங்களுடன் தொகுத்து, 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை இயக்குனருக்கு (விசாரணை) உத்தரவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications