சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி - ஜெ நேரில் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

அவரை ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 ஆவது ஆண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில், பிரணாப் முகர்ஜியை, ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர். முதல்வருடன் தமிழக அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த குடியரசுத் தலைவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து தமிழக ஆளுநர் மாளிகை சென்ற பிரணாப், மரியாதை நிமித்தமாக தமிழக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications