தன்னுயிரைக் கொடுத்து ரயிலில் அடிபடவிருந்த முதலாளியைக் காத்த நாய்
மாஸ்கோ: ரஷ்யாவில் தற்கொலை செய்ய ரயில் தண்டவாளத்தில் படு்த்த தனது முதலாளியைக் காப்பாற்றிய நாய் ரயிலில் அடிபட்டு இறந்தது.
ரஷ்யாவின் கரகன்டா நகரில் 43 வயதான ஒருவர் மூக்கு முட்ட ஒரு பாட்டில் வோட்கா குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்வதற்காக அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிவிட்டார். அவர் வளர்த்த நாய் தண்டவாளத்தில் தூங்கிய தனது முதலாளியை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக ரயில் வருவதைப் பார்த்த நாய் முதலாளியைக் காக்க அவரை பிடித்து இழுக்க ஆரம்பித்தது. அது அவரை இழுத்துக் கொண்டிருக்கையில் தண்டவாளத்தில் ஒரு நாய் நிற்பதை ரயில் ஓட்டுநர் பார்த்துவி்ட்டார். நாய் அடிபடக் கூடாதே என்று நினைத்து அவர் உடனேரயிலை நிறுத்தினார். ஆனால் ரயில் நிற்கும் முன்பு நாய் அதில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தது.
அந்த நாயின் முயற்சியால் அதன் முதலாளி காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு விலா எலும்பு முறிவு, தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் வளர்த்த நாய் தன்னுயிரைக் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications