ஓணம் பம்பரில் ரூ5 கோடியும் 1 கிலோ தங்கமும் அள்ளிய மளிகைக் கடைக்காரரர்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள அரசின் ஓணம் பம்பர் குலுக்கல் லாட்டரியில் மளிக்கைக் கடை நடத்தி வரும் விஜயன் பிள்ளை என்பவருக்கு ரூ5 கோடியும் ஒரு கிலோ தங்கமும் பரிசாகக் கிடைத்திருக்கிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பம்பர் குலுக்கல் லாட்டரியை கேரள அரசு வெளியிட்டிருந்தது. இந்த டிக்கெட்டின் விலை ரூ200 என விற்பனை செய்யப்பட்டது. இதன் குலுக்கல் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட ரூ5 கோடியும் ஒரு கிலோ தங்கமும் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த விஜயன் பிள்ளை என்பவருக்கு கிடைத்தது.
2-வது பரிசு திருச்சூர் மாவட்டம் சாவக்காடைச் சேர்ந்த முகமது அலி, இப்ராகிம், கிருஷ்ணா, சுரேஷ் ஆகியோர் கூட்டாக வாங்கிய லாட்டரிக்கு ரூ1 கோடி கிடைத்திருக்கிறது.
கூரையைப் பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும் என்பது இதுதானோ!












Click it and Unblock the Notifications