ஆஸி. செல்ல முயன்றதாக தமிழக அகதிகள் முகாமைச் சேர்ந்த 84 பேர் மங்களூரில் தடுப்பு

Subscribe to Oneindia Tamil

Refugees
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக காத்திருந்த 84 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதாகக் கூறி பணம் பெற்ற 13 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரில் கர்நாடக மேற்கு சரக ஐஜி பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் சென்னை, மதுரை, புதுக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 84 பேர் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் ரூ30 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை ஏஜெண்டுகள் வசூலித்துள்ளனர். அகதிகளிடம் வசூலித்த பணத்தில் மங்களூரில் ரூ11.50 லட்சத்துக்கு படகு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் லிட்டரும் பெரிய அளவில் உணவுப் பொட்டலங்களும் படகில் வைத்திருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்ட 84 பேரில் 22 பேர் பெண்கள். 56 ஆண்கள். 6 குழந்தைகள் அடங்குவர். தற்போது கைது செய்யப்பட்ட ஏஜெண்டுகள் ஏற்கெனவே கொல்லம் மற்றும் பொன்னம் கடற்பரபில் இருந்து இலங்கைக்கு அகதிகளை ஏற்றிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.கர்நாடகத்தில் இருந்து முதல் முறையாக அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க இவர்கள் முயற்சித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். அவர்களிடம் அகதிகளை ஒப்படைக்க இருக்கிறோம். ஏஜெண்டுகள் 13 பேரும் ஈழத் தமிழர்கள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+