20 வயது நீதியரசன் சொல்றதைக் கேட்க மறுக்கிறார்... 35 வயது ஜானகி புகார்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு இப்போது திருமணம் செய்து கொள் என்று சொன்னால் சொல் பேச்சைக் கேட்க மறுக்கிறார் என்று 20 வயது வாலிபர் மீது 35 வயதுப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த உடையூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் நீதியரசன். வயது 20 ஆகிறது. இவர் மீது ஜானகி என்ற 35 வயதுப் பெண் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில் ஜானகி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், நான் எனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டேன். எனக்கு 5 வயதில் மகன் இருக்கிறான். இருவரும் தனியாக வசித்து வருகிறோம்.

என்னுடைய வீட்டில் வேலை செய்வதற்காக வந்த நீதியரசன் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தேன். என்னுடன் பலமுறை நீதியரசன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் என்னிடம் அடிக்கடி செலவுக்குப் பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவரிடம் என்னைத் திருமணம் செய்து கொள் என்று கேட்டேன். ஆனால் அவர் எனது சொல் பேச்சைக் கேட்க மறுக்கிறார். திருமணத்திற்கு மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜானகி.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நீதியரசன், கைது செய்வதிலிருந்து தடை உத்தரவு வாங்கி விட்டார். உயர்நீதிமன்றம் நீதியரசனுக்கு கொடுத்த முன் ஜாமீன் உத்தரவில், அவரைக் கைது செய்யக் கூடாது. 8 வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும், நீதியரசன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 7ம் தேதி போளூர் மகளிர் காவல் நிலையத்தில் நீதியரசனை அவரது வக்கீல்கள் ஒப்படைத்தனர். ஆனால் கடந்த 3 நாட்களாக அவரை வெளியே விடாமல் விசாரணை என்ற பெயரில் மகளிர் போலீஸார் தங்களது பொறுப்பிலேயே வைத்துள்ளதாக நீதியரசனின் வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் அந்தப் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+