30 நாட்களில் புதிய பாஸ்போர்ட்டாம்.. ஆனால், நிஜத்தில்?
மும்பை: 30 நாட்களில் புதிய பாஸ்போர்ட், 15 நாட்களில் பாஸ்போர்ட் புதுப்பித்துக் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் பெற மக்கள் இனி காத்திருக்கத் தேவையில்லை 30 நாட்களில் புதிய பாஸ்போர்ட்டும், 15 நாட்களில் பாஸ்போர்ட் புதுப்பித்தலும் செய்து தரப்படும் என்று மத்திய வெளியுறவத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பித்தால் 1 முதல் 7 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மக்களின் வசதி கருதி பல்வேறு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதையடுத்து தான் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குறித்த போலீஸ் விசாரணை அறிக்கை 21 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும். ஆனால் விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் முறையாகத் தெரிவிக்காமல் இருப்பதால் போலீசார் தங்கள் அறிக்கையை சமர்பிக்க காலதாமதம் ஆகிறது. விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் 74 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசு என்னதான் விதிமுறைகளை எளிதாக்கினாலும் மக்கள் பாஸ்போர்ட் பெற அல்லல்படுவது தொடர்கிறது என்பது நிஜமோ நிஜம்.












Click it and Unblock the Notifications