கிரானைட் கொள்ளையில் தேடப்படும் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி டெல்லியில் பதுங்கல்?

தமிழகத்தை உலுக்கியிருக்கும் கிரானைட் கொள்ளையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் பிடிபட்டிருக்கின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் பி.ஆர்.பி குடும்பத்தினரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
துரைதயாநிதி டெல்லியில் மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் பதுங்கியிருக்கின்றனர் என்று தனிப்படை போலீசார் கருதுகின்றனர். இதேபோல் பி.ஆர்.பி. குடும்பம் மூணாறில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. பி.ஆர்.பி.யின் சொந்த ஊரான பரவையையும் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பி.ஆர்.பி.யின் பினாமியான ஜி.ஜி.கிரானைட்ஸ் அதிபர் கோபாலகிருஷ்ணன், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கொத்தம்பள்ளியில் கிரானைட் குவாரியில் பதுங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications