துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்துக்கு ஜெ. ரூ. 5 லட்சம் நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

கூடங்குளம் கடற்கரையில் தொடங்கிய வன்முறையும் போலீஸ் தாக்குதலும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. தூத்துக்குடியில் மீனவர் ஒருவர் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்றும் கூடங்குளம் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் அந்தோணிசாமியின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே பொதுமக்கள் அமைதி வழியில் போராட்டத்தை நடத்துமாறு கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+